Sunday, May 22, 2011

இசை மீட்டும் நினைவுகள்

2 கருத்துக்கள்


ஜில்லென்று பெய்தோந்த
ஒரு
மழைப் பொழுது...
வீதியெங்கும்
உதிர்ந்து
பரவிக் கிடக்கும்
கொண்டற் பூக்கள்....
குடையைச் சுழற்றி
தூறல்களை தூவியபடி
நீ  சென்ற
சாலை...
மௌனத்தில்
மூழ்கித்தவிக்கும்
எனக்கும் உனக்குமிடையிலான
பார்வைகள்..
நினைக்கும் போதெல்லாம்
இன்னமும்
மனசெல்லாம்
பனி ஊறிய புல்லின்
குளிர்ச்சி.....


மீண்டும் ஒரு தடவை
யாசிக்க வேண்டும்
அந்த நாட்களை.....
மீண்டும் மீண்டும்
தொலைக்க வேண்டும்
இரவுகளை.....


மா.குருபரன்
22-05-2011

2 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க