Saturday, April 18, 2020

கொரோனா போரும் அதன் பின்னரான வாழ்வும்!

0 கருத்துக்கள்



2019 மார்கழி மாதமளவில் சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக் கிருமி, குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் உலகம் முழுவதும்  பரவி லட்சத்தை தாண்டி உயிர்களை பலியெடுத்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாது, அரசியல் மற்றும் பொருளாதார  இயக்கத்தில் பெரும் அடியைக் கொடுத்துள்ளது.  கொரோனா கிருமியின் பரவல் வெறும் இயற்கைத் தொற்று நோய் என்பதை மறுக்க இப்போது தான் உலகம் மெல்ல மெல்ல தலைப்பட்டுவருகிறது. 

அமெரிக்காவில் நிதி நிறுவனங்கள் தொடர்பான சட்ட மாற்றம் 2007-2008 காலப்பகுதிகளில்  அமெரிக்காவில் வீடு மனை மற்றும் கடனட்டை வர்த்தகத்தில் பெரும் இழப்புகளை ஏற்படுத்த, அது உலகளவில் நிதி நிறுவனங்களை ஆட்டம்காண வைக்க உலகமே பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டது மாத்திரமல்லாது காலப்போக்கில் அமெரிக்காவின் சண்டித்தனம் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது. 2007-2008 காலப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அப்போது "2ம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடி" என பொருளாதார வல்லுனர்கள்  குறிப்பிட்டிருந்தாலும் அதனால் பங்குப் பரிவர்த்தனை முதலாளிகளும் அது சார்ந்த முதலீடுகள் மற்றும் அது சார்ந்த தொழிலாளிகளும் தான் நேரடியாக பாதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது கொரோனா கிருமியின் தொற்றால் ஏற்பட்டிருக்கும் அல்லது ஏற்படப்போகும் நெருக்கடியானது படு மோசமானதாக இருக்கப்போகிறது.  

கொரோனா கிருமியின் தொற்று நோயானது 3ம் உலகப்போர் என்று சொல்லும் அளவிற்கு தாக்கங்களை ஏடிற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்லாது இந்த தொற்று நோய்க்கு பின்னரான காலப் பகுதியில் பொருளாதார நெருக்கடியானது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையே ஊகிக்க முடியாத அளவில் நிலமை நாளுக்கு நாள் நகர்ந்து கொணடிருக்கிறது. சர்வதேச அளவில் பொது அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் நிதி உதவிகளைச் செய்து தேவையான நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்காவின் சண்டித்தன அரசியல் ஆட்டம் காணப்போகிறது என்றே தோணுகிறது. 

* * * *
கொரோனா கிருமியின் உருவாக்கத்திற்கும், தொற்றின் பரம்பலுக்கும் சீனா மீது அமெரிக்கா தொடர்ச்சியாக வைத்துவரும் குற்றச்சாட்டுக்கள் சந்தேகங்களை உருவாக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. 

சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா கிருமி உருவாகி பெரும் அழிவுகளை ஏற்படுத்தி சில வாரங்களிலேயே அது இத்தாலி மற்றும் ஈரான் நாடுகளை மோசமாக தாக்கியது. இங்குதான் கொரோனாவின் அரசியல் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பித்தது. சீனாவின் பட்டுப்பாதை திட்டத்திற்கு, G7 நாடுகளின் கூட்டமைப்பில் முதலாவதாக ஆதரவளித்தது இத்தாலி நாடு . பட்டுப்பாதை திட்டத்தில் பெரும் நிலப்பகுதியும் தரைவழி ரயில் பாதைத் திட்டமும் ஈரானில் காணப்படுகிறது. இரண்டு நாடுகளிலும் சீனா தனது பட்டுப்பாதை திட்டத்திற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் கொரோனாவின் தாக்கமும் பட்டுப்பாதை வழியாக மிக வேகமாக பரவியமையானது கொரோனாவின் அரசியல் குறித்து அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கும். 

தற்போது பட்டுப்பாதையில் கொரோனாவின் தாக்கம் குறைந்துவரும் அல்லது கட்டுப்படுத்தப்பட்டுவரும் அதேசமயத்தில், அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் பட்டுப்பாதையில் ஏற்படுத்திய தாக்கத்தைவிடவும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இலகுவாக சொல்வதென்றால் இந்த நிலமையானது "எதிரியின் ஆயுதத்தை கைப்பற்றி அதே ஆயுதத்தால் மிக உக்கிரமாக எதிரியை தாக்குவது" போன்றது. தற்போது அமெரிக்க அரசு நிலமையை கையாள முடியாமல் திணறும் அளவிற்கு எல்லை மீறிச் சென்றுள்ளது. 2020 தை மாத கடைசிகளில் கொரோனாவின் தாக்கம் பெரியளவில் கண்டிறியப்பட்ட நேரத்தில், அமெரிக்க அதிபர் ரம்ப் "கொரோனாவால் அமெரிக்காவை நெருங்க முடியாது" என்ற தொனிப்பொருளில் பல அறிக்கைகளை வெளியிட்டிருந்தாலும் தற்போது நிலமை எல்லைமீறிப் போக சீனா மீதும் உலக சுகாதார நிறுவனத்தின் மீதும் கடும் குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறார். உச்சக்கட்டமாக, சீனாவின் வூகான் மாகாணத்தில் இயங்கிவரும்  நுண்ணுயிர் ஆய்வுகூடம் ஒன்றிற்காக அமெரிக்காவில் இரகசியமாக பணியாற்றி வந்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்/விஞ்ஞானி ஒருவர், அமெரிக்க உள்ள புலனாய்வு அமைப்பான FBI ஆல் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன (உண்மை உறுதிப்படுத்தப்படவில்லை).

ஆக, கொரோனா கிருமியின் தொற்றானது ஏற்கனவே திட்டமிடப்பட்ட தாக்குதல் திட்டமாக இருக்கலாம். அமெரிக்காவும் சீனாவும் நன்கறிந்து வைத்திருந்த போர்த் திட்டத்தை யார் முதலில் ஆரம்பிப்பது என்ற போட்டியில் தவறுகள் நடந்திருக்கலாம் அல்லது முதலில் கொரோனா கிருமிப் போரை தொடங்கியவரின் திட்டத்தில் ஏதாவது தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். எது எப்படியோ இது நூறு சதவீதம் இயற்கையால் உண்டான அழிவல்ல என்பது மாத்திரமே உண்மை. 

*        *        *      * 
இனி என்ன நடக்கும்

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாகக்க உண்டாக்கப்பட்ட "சமூக இடைவெளி" இந்த தொற்றின் தாக்கம் முடிவடைந்ததன் பின்னர் சமூகத்திற்குள் பெரும் "பொருளாதார சமூக இடைவெளியை" உருவாக்கப்போகிறதென்பதே உண்மை. 

இரண்டு மாதத்திற்கும் மேலாக அநாவசிய செலவுகளிலிருந்து விடுபட்டிருந்த நடுத்த வருமான குடும்பங்கள் மேலதிக சேமிப்புகளோடும், சேவை வழங்கும் தொழில்களில் மற்றும் அத்தியாவசியப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த வர்த்தகக் குடும்பங்கள் வழமையைவிட அதிகமான வருமானத்தோடும், மருந்து உற்பத்தி வர்த்தகர்கள் அதிகளவு லாபத்துடனும் காணப்படும் அதே வேளையில், தினசரி கூலியில் வாழ்ந்த மக்கள் இருந்த சொற்ப சேமிப்பையும் இழந்து, எதிர்கால வேலைக்கான உத்தரவாதமும் இன்றி இக்கட்டான நிலைக்குக்கு தள்ளப்படுவர். 

தவிர இந்த ஊரடங்கு காலப்பகுதியில் பெருமளவிலான தனியார் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு குறைந்த சம்பளத்தை வழங்கி,  தொழினுட்பத்தை பயன்படுத்தி தேவையாள அளவு வேலையை வாங்கிவருகிறார்கள். அதாவது தொழினுட்பத்தை பயன்படுத்தி குறைந்த அளவு சம்பளத்துடன் வேலையை செய்து முடிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. உணவு மற்றும் மருந்துவ உற்பத்தித் துறையைத் தவிர அனைத்து உற்பத்தித் துறைகளும் முடங்கியுள்ளன. 

உற்பத்தித் துறையின் முடக்கத்தால் வீழ்ந்த பொருளாதாரத்தை ஈடு செய்யும்வரை பண வீக்கத்தை அரசாங்கங்களால் கட்டுப்படுத்த முடியாத நிலையை தோன்றும். இந்த நிலை உலக அரசியல் ஒழுங்கில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். 

இயற்கை அழிவிற்கு பின்னரான அரசியலும் போருக்கு பின்னரான அரசியலும் வெவ்வேறானவை.  கொரோனா  தொற்று நோய் வெறும் நோயல்ல.. இது ஒரு வகையான உலகப் போர். கொரோனா தொற்றின் பின்னரான அரசியலும் பொருளாதாரமும் ஒரு உலகப் போருக்கு பின்னரான அரசியல் மற்றும் பொருளாதாரம் போலவே இருக்கும்.  

மா.குருபரன்
18-04-2020





0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க