![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3K2oVtLd-U6MLQanz5f1Bgr9q8fHEg5ZzSxJzlwBm6Gp3jzLoKrtH0oKBzdP-ixbOWHsA5L3H6XO-6pkS7MU-j4Mbk9EMZ7q8vu85ptTrDH3eh8T7mWcYvTQpAY1G5LivvIBykV-Gsrs/s400/vali.jpg)
பல வினாக்கள்
கல்லறைகளாகி விடுகின்றன....
அதை விதியென்பதா
அல்லது
மதியில்லையென்பதா????
கருவிலேயே கலைக்கப்பட்ட
ஒரு
மென்மை காதலென்பதா????
இது..
சுகமான வலியென்றாலும்
சுமையாக கனக்கவேயில்லை - அது
நீயென்பதால்....
பொழுதுகள் அழிந்து விட்டன..
ஆனால்...
நினைவுகள் மட்டும்
இதயத்தின் ஓர் மூலையில்
துருக்களாய்
தொங்கிக் கொண்டு......"
6.12.2008
மா.குருபரன்
மா.குருபரன்
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க