![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjg6d32MV6ZKPMjsw3XbUpVUcKEKyRSlPOLJlhfHbE3KDqkPfAGVt8a7XBlVFAOBKtvTIydZiNlrI2xskeyPHdQJrr2G69vXiccjxzX15tTCI-xfJAY7K9ZKO59rCnlYfVJXkdLqnf6sx4/s400/aekkam.jpg)
ஒரு இரவு
மௌனமாய் நீண்டது,
முகிலுக்குள்
ஓடி விளையாடிய
நிலாவும்
நீண்ட வெளியில்
ஏதோ ஒர் யோசனையில்,
சளியின் உச்சத்தால்
உஸ்ணம் கூடி
விழியருகில்
கண்ணீரோடு
மெய் சோர்ந்து
கொண்டது,
தலை வைக்க
தாயணையை - என்
கரங்கள் தேடியது
கூடுகள் சிதைக்கப்பட்டு
சின்னா பின்னமாக்கப்பட்ட
சிங்கள தேசத்தில்
வாழ்பவன் என்று
தெரியாமல்!
- மா.குருபரன் -
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க