Thursday, July 23, 2009

காதல்.....

0 கருத்துக்கள்



இளமை மொட்டுடைத்து
மலர்களை
ரசிக்க பழகிய காலம்..
உவமையின்
பல அர்த்தங்கள் கூட
இந்த காதல் தான்
சொல்லித்தரும்..
காற்றில் அசையும்
கன்னத்து முடியையும்
அதை கோதிவிடும்
அந்த கையின்
அழகையும்..
கண் குறுக்கி
மெய்மறந்து சிரிக்கும்
குழந்தைதனத்தையும்
அவள் விழிகள் அறியாது
தூரத்து பார்வையில்
ரசிக்கத்தூண்டுவது காதல்தானே!!
அந்த சுடிதாரை
தேடுவதற்காக
திருவிழாக்களில்
கோயிலை பல தடவைகள்
சுற்ற வைப்பதும்
இந்த காதல் தானே!!
ஊர்களில்
பல இளைஞர்களை
சைக்கிளோட்ட வீரர்களாக்கியதும்
காதல் தானே!!!
அன்பாய் கோவிப்பதும்
தெரிந்தும்
அவள் முகம் சுழித்து போக
உள்ளுக்குள் அழுவதும்
காதல் தரும்
சுகமான வலிகள் தானே!!!!
இரண்டு ரோஜாக்களையே
நந்தவனமாய் ரசிக்கும்
காதல் கொண்ட மனம்.
காதல் கொண்ட மனம்
தனிமையில் கூட
சுகமாய் மிதக்கும்...


மா.குருபரன்
14 - 02 - 2009
12:01 AM



0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க