Thursday, July 23, 2009

நாளை என்ன?????

0 கருத்துக்கள்



நாளைக்கான இன்றுகளும்
இன்றைக்கான நேற்றுகளும்
எப்போதும் போலவே
விடியலும் அஸ்தமனத்துடனும்...
விடியாத இரவுகளும்
புலர்ந்தால் போகத பொழுதுகளும்
எங்கனம் சொல்வேன்
எழுத்தில் திணிக்க முடியாத வலிகள்...
நாளை என்ன - இது
ஜீரணிக்க முடியாத ஏக்கம்...
சுற்றி முட்கள்
வெளியே பூக்கள்...
வசந்தத்தின் வாசனை மட்டும்
அவ்வப்போது நுகர்ந்து கொள்ளும் வாழ்க்கை..
தூர்ந்து போன கனவுகள்
மீண்டும் கனவுகளை
நினைக்க முடியாத இரவுகள்...
சாரல் நனைத்த
காற்றில் மட்டும்
கசிந்து போகும் மனம்....
கண்ணீர் சுரப்பிகள்
செயலற்று போயின....
நாளை என்ன??? -இது
என்னில் எழும்
ஜீரணிக்க முடியாத ஏக்கம்..

மா.குருபரன்
20-06-2009



0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க