Thursday, July 23, 2009

பாதைகள் மாற்றப்பட்டது...

0 கருத்துக்கள்

எப்போதும் போல் இல்லாது
40 மீற்றர் உயரத்தில் நிற்கும் போது
அஸ்த்தமனமாகியது நாள்.....
இயற்கையின் பல
செயற்கைகளை
வெளிச்சம் போட்டு காட்டியது
அஸ்தமனம்.....
வாழ்கையின் காலை வாரிவிட்டது
பழிதீர்த்தல்.........
தூக்கி வீசப்பட்டது
சாக்கடையோ என்னவோ
தாங்கி கொள்ள எத்தனையோ கரங்கள்...
நன்றி கடவுளுக்கு......
மரண வாழ்க்கையில்
பாதைகள் சிதைந்து
ரத்தம் வழிந்தபோது
உண்மையில் இப்பிடியொரு
வலியிருக்கவில்லை....
உண்மைகளை மாற்ற முடியாதலால்
செல்லும் பாதையை மாற்றியது வஞ்சகம்....
கொஞ்சி விளையாட
எம்மால் முடியாததால்
வஞ்சித்து பார்த்தது வஞ்சனை...
இயற்கைக்கு எப்போதுமே
வரலாற்றை தான் பிடிக்கும்
அதனால்தான்
மெச்சல்களையும் வஞ்சனைகளையும் - அது
வாழ்ந்து பார்க்க விடுகிறது.......


மா.குருபரன்





0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க