Monday, September 21, 2009

பெளத்தம் பற்றியது..

0 கருத்துக்கள்


இந்த கலந்துரையாடல் பெளத்த மதத்தை பற்றியது. முகப்புத்தகத்தில் "என்கவிதைகள்" குழுமத்தில் கலந்துரையாடுவதற்காக தலைப்பிடப்பட்டது. இருப்பினும் எந்த அளவுக்கு வெற்றியளித்தது என்பதற்கப்பால் சில பெறுமதியான விடையங்கள் நண்பர்களால் பகிரப்பட்து. அதனால் அந்த முழுக் கலந்துரையாடலையும் இங்கு இணைக்கிறேன்.
இது சம்மந்தமான உங்கள் கருத்தூட்டல்களோ தகவல்களோ அனுப்பி வையுங்கள்.



குருபரன்: புத்த பெருமான் இந்து சமயத்தில் இருந்து வந்தவரா? பௌத்தத்தின் அடிப்படை இந்து சமயத்தில் இருந்து வந்ததா?

இது பற்றிய உங்கள் விடைகளையும் ஆய்வுகளையும் இங்கே பதியுங்கள்.

ஆதாரங்கள் இருந்தால் அவற்றையும் ஆவணப்படுத்துங்கள்.

Meera Balachandran (Toronto, ON) replied on February 2, 2008 at 9:02am


தாங்கள் இதில் ஆராய்ச்சி செய்கின்றீர்களா இல்லை கட்டுரை எழுத முற்படுகின்றீர்களா?

பௌத்தம் இந்து சமயத்தில் இருந்து வந்தது என்று நான் கூற மாட்டேன் ஆனால் புத்தர் இந்து சமயத்தை தான் பின்பற்றி வந்தவர் என ஆதாரங்கள் கூறுகின்றன எனவே நாம் சொல்லலாம் பௌத்தம் இந்து சமயத்தின் அடிப்படையில் இருந்து வந்தது என!

புத்தர், வாழ்க்கையை பற்றி சொல்லுகையில் துன்பம் தவிர்க்க முடியாத ஒன்று என்றும் நம் செய்கைகளுக்கு எல்லாம் நாம் இறந்த பின்பு பிரதிபலன் இருப்பது எனவும் (கர்மா) ஒவ்வொரு மனிதனின் இறப்பிற்க்குப் பின்னால் ஒரு வாழ்க்கை இருக்கு எனவும் சொல்கின்றார் இதையே தான் நமது இந்து சமயமும் உரைக்கின்றது. எமது யார்க்கையை(உடம்பு) நிலையாமைக்கு உதாரணமாக சுட்டிக் காடிடுகிறார்.

மேலும், எமது சமயம் சொல்லும் பொய், களவு, மது அருந்தாமை,உயிர்களை வருத்தாமை போன்றனவை நாம் செய்யக் கூடாத்வை என அவர் விளக்கினார்..

மேல் கூறியவை யாவும் நான் ஒர் நூலில் வாசித்து தெரிந்து கொண்டவை. அது யாரால் எழுதப்பட்டதென என் நினைவில் இல்லை..

குருபரன் replied to Meera's poston February 2, 2008 at 1:34pm

நண்பர்களே!
அடிப்படையில் நான் அரசிலைப் பற்றி ஆராயவோ அல்லது கட்டுரை எழுதவோ வரவில்லை. ஒரு சமயத்தின் அடிப்படை வாதத்தில் இன்னோர் இனம் நசுக்கப்படும் கொடுமை உலகத்தின் ஓர் மூலையில் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் அவ் சமயத்தின் அடிப்படை பற்றி சிறிதாய் ஆராய நினைத்தேன். நான் நிகழ்கால வரலாற்றில் வாழ நினைப்பவன் அதனால் இவ் முயற்சி உங்களை சங்கடப்படுத்தியிருந்தால் எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மா.குருபரன்

Sindhu Sivadas (Toronto, ON) replied to குருபரன்.மா's post on February 2, 2008 at 10:31pm

Actually these are very interesting questions comply the same answer interchangeably. According to my knowledge, Lord Buddha was born to Hindu King called Suddhodana. His mother is Queen Maha Maya . They named their child Siddhartha Gautama and raised their child based on Hindu rituals. Siddhartha Gautama later got his name as Buddha, which means enlightened person. There are many versions about his birth. Anyway this answers the first question that Buddha came from Hinduism. According to your second question, I will certainly say Buddhism came from Hinduism initially, since Buddha is a founder. Eventually Buddhism was passed on by his disciples all over world especially central and eastern Asia. From there it was slightly modified by followers to fit in that country’s culture and to fit in their local beliefs. Now Buddhism itself has 3 main division: Theravada, Mahayana, and Vajrayana. So my answer to your second question is main foundation or themes to Buddhism came from Hinduism but some of them has changed slightly.

Kamelrajh Puavanakumar (Manchester) replied to குருபரன்.மா's post on February 3, 2008 at 2:40am

(இக்களம் கவிக்கானது என அறிவேன் இருப்பினும் கணை வந்த பின் பதில் கணை தொடுப்பதுதானே முறை.... நற்கருத்துக்களையும் நாம் கவி என கொள்வோம்....)

என் அன்பு தோழி கூறியது போன்றே நானும் பௌத்தம் இந்துவில் இருந்து வந்ததென்பேன்....என் காரணம் சற்று வித்தியாசமானது. நான் படித்ததிலிருந்தும் கேள்வி ஞானத்திலிருந்தும் மற்றும் சிறிய சிந்தனையிலிருந்தும் உதிர்த்தவையை இங்கு வைக்கிறேன்....

இந்துத்துவத்தை ஒரு சமயம் என்பதை விட சிந்துவழி தோன்றியோரின் வாழ்க்கைமுறை என்பேன். ஆக, புத்தரும் அவ்வழி மக்களின்பால் தோன்றியதால் அவரும் இந்து என்பேன். இந்து என்பது ஒரு வாழ்க்கை(வழி)முறை என்பது அதிலடங்கும் 5 பிரிவிலிரிந்தும் தெளிவு படும்.

(சைவம், வைணவம், சாக்தம், கௌரம் மற்றும் கௌமாரம்). இவை ஐந்தையும் இணைக்க இந்து வழிமுறையை பயன் படுத்தினார்கள் என்பது என் கருத்து. ஏன் பௌத்தத்தையும், சமணத்தையும் இணைக்கவில்லை என்றால், மேற்சொன்ன ஐந்தும் ஒரு கடவுளை (இல்லை கற்பனைக்கடங்கா சக்தியை) அடிப்படையாய் கொண்டன. ஆனால் பின் கூறிய இரண்டும் சற்று வித்தியாசமான தர்மத்தை கூறுகின்றன. கொஞ்சம் சிந்தித்து பார்த்தால், புத்தர் கடவுளிருப்பு (ஒரு இல்லை கற்பனைக்கடங்கா சக்தியை)கொள்கையை மறுத்திருக்கிறார் என்றும் கூறலாம்.....

ஆக மொத்தத்தில், இந்துத்துவத்தில் (நாகரிகத்தில்) இருந்துதான் பௌத்தம் வந்தது என்பது தெளிவு படும்.

மற்றும் இலங்கையில் நடக்கும் வன்முறை இன நசுக்கலுக்கு மதத்தை காரணம் காட்டல் தவறெனக்கருதுகிறேன் காரணம் அரசின் பெரும்பாலோனோர் பௌத்தராய் இருப்பினும் சிலர்
கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே அந்த நசுக்கலை "ஒரு குளாம் அதன் பாரம் பரியத்தை இல்லை அதன் மூதாதயர்களை"*** அழித்தொளிக்கின்றது என்றே கொள்ளவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

*** நான் குறிப்பிட்டது சிங்களவர்கள் மூதாதையராய் கொள்ளும் விஜயனும் அவன் தோழர்களும் மணந்தது இயக்ககுல பெண்களை... புராணங்களின்படி இயக்கரும் நாகரும் தமிழர்களே என புலப்படுகிறது. எனவே சிங்களவர்களின் மூதாதையர்கள் தமிழர்களே...

தோழரே இதற்கு ஆதாரம் கேட்காதீர்கள் காரணம், நான் முதலே கூறியது போன்று சிலதை கற்று சிலதை தியானித்து மற்றவற்றை கேள்வி ஞானத்தில் கொண்டது....


Kamelrajh Puavanakumar (Manchester) wroteon February 3, 2008 at 4:23am

சிறிய எழுத்துப்பிழை கருத்துப்பிழையாவதை தவிர்க்க விரும்புகிறேன்:

"கௌரம்" என்று இந்துவின் ஒரு பிரிவை குறிப்பிட்டிருந்தேன். மன்னிக்கவும் அது "சௌரம்" என்றிருக்க வேண்டும்...

மற்றும், பறுவாயில்லை சிந்து, கருத்தை வெளிப்படுத்தல் தாம் முக்கியம், அது தமிழில் இருந்தால் சிறிது சிறப்பாயிருக்கும் என் தாழ்மையான கருத்து அவ்வளவும் தான்.... மற்றும் வெறும் பார்வையாளராய் இருப்பதை விடுத்து கருத்தை வெளிப்படுத்தல் எமக்கு எவ்வளவு நன்றாய் இருக்கும்..... மொழி கருத்துக்கு எப்போதும் தடையாய் இருக்க கூடாது என நினைக்கிறேன்....

Sindhu Sivadas (Toronto, ON) wroteon February 3, 2008 at 10:45pm

I'm very amazed by Kamel's historical point of Buddhisim. Buddy u haven't forgotten any history from DTV :)


Kamelrajh Puavanakumar (Manchester) wroteon February 4, 2008 at 3:24am


உண்மைதான் சிந்து....

சில விடயங்களை மறப்பதென்பது இயலாது. அதுபோல்தான் இவ்விடயமும்...

எம்மை அந்நியரென்றும், நாம் தமிழ் நாட்டில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் என அறிவற்று குதர்க்கம் பேசும் சிங்களவர் உண்மையென கருதுகின்ற மகாவம்சம் சொல்வதென்ன? விஜயன் இலங்கை வந்து அங்குள்ள இயக்ககுல பெண்களை மணந்ததில்தான் அவர்களின் சந்ததி தோன்றியது என்பதுதானே? இதில் எவ்வளவு உண்மை இருக்கின்றது என ஆராயவேண்டிய விடயம் என்பது வேறுவிடயம் காரணம் விஜயனின் தந்தை எனக்கருதப்படும் சிங்கபாகுவின் பிறப்பே ஒரு விசித்திரமானது என்பது நீங்கள் அறிவீர்கள் (ஒரு சிங்கத்துக்கும் மனித பெண்ணுக்கும் எவ்வாறு ஒரு (ஒன்றல்ல இரண்டு) மனித குழந்தை பிறக்க கூடும் என்பதே ஒரு நம்பமுடியாதது...).

அப்படி பார்த்தால் எம் புராணங்களில் வரும் சம்பவங்களும் நம்பமுடியாதவை தாம் மறுக்கவில்லை ஆனால் தமிழன் தன் பிறப்பிற்கு இவ்வாறு ஒரு மிருகத்தினை ஆதியாய் காட்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது.....

சரி அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டாலும், பிற்கால அகழ்வாராச்சிகளின்படி சிங்களவர் என்று தங்களை அடையாளம் காட்டுவோர், ஆரம்பத்தில் தமிழர்களாக தமிழ் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அதன்பின் கறுவா பயிர்ச்செய்கைக்காக இலங்கையின் தென்பகுதிக்கு சென்று அங்கு அவர்கள் தமிழையே [ஒரு வித்தியாசமான ஒலியியலில் (accent)] பேசியிருக்கிறார்கள்.

அதன்பிறகு பௌத்ததின் வருகையை அடுத்து அவர்கள் தம்மை வேறு இனமாக அடையாளம் காட்ட விரும்பி (பாளி மொழியையும் தமிழையும் இணைத்து) சிங்களத்தை உருவாக்கி இருக்க வேண்டும். காரணம் சிங்கையிலே பல தமிழ் சொற்கள் இருப்பதை காணலாம். எவ்வாறு தமிழில் இருந்து (இந்தியாவில்) மலையாழம், தெலுங்கு மற்றும் கன்னடம் உருவானாதோ அவ்வாறே....

ஆக உண்மை இப்படி இருக்க அவர்களோ எம்மை அந்நியராய் எண்ணி எம்மை அழிக்க கங்கணம் கட்டிகொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை....


ஒரு சிறிய ஏக்கம் எனக்கு.....

மகாவம்சத்தின் நம்பதகாததையெல்லாம் (சிங்கபாகுவின் பிறப்பு) நம்பித்தொலைகின்ற சிங்களத்தோர் எம் புராணம் [முக்கியமாய் இயக்ககுல தலைவன் இராவணன் (தமிழ் மன்னன்) இலங்கையை ஆண்டான் எனும் இராமாயணம்] கூறும் பலதை ஏற்றுக்கொள்ள தயங்குவது ஏனோ....


Lalitha Sarva (Waterloo) wroteon February 4, 2008 at 4:17am
ivatai ellam thohuthu oru noole eluthi vidalam pol ullathu...

Kamelrajh Puavanakumar(Manchester) replied to Lalitha's poston February 4, 2008 at 6:48am
நூலாக்குவதில் எந்த தடையுமில்லை தாம் இருப்பினும் இதுசார் பொருளாதார மார்க்கங்கள் வழிவகுக்குமா என நானறியேன்.....மற்றும் இதுதொடர்பாக இக்களத்தில் முன்வைக்கப்பட்ட எனது சில கருத்துக்களுக்கான ஆதாரங்களை நாடுதலும் சற்று நடைமுறைக்கு இயலாதவைகள் என்பது என் தாழ்மையான கருத்து...... காரணம், இவை தீர்க்கமானவையாக நிரூபிக்க படுவதற்கு பல அகழ்வாராச்சிகள் நிச்சயமாய் தேவை....

தோழி, கருத்துக்களுக்கு நன்றிகள்................

யாழவன்

குருபரன்.மா replied to Kamelrajh's poston February 5, 2008 at 11:28am

அருமையான வாதங்களை முன்வைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் கோடி!

கவிக்குரிய பக்கத்தில் என் வாதத்தை அனுப்பியதிற்கு முதலில் என்னை மன்னிக்கவும்.

தோழா யாழவா!
உங்களிடத்தில் நிறைய விடயங்கள் இருக்கின்றன, அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், தமிழர் சார்ந்த வரலாறு அறிய நினைக்கும் அனைவருக்கும் அது பெறுமதியாய் இருக்கும்.

- மா.குருபரன் -

Kamelrajh Puavanakumar (Manchester) replied to your poston February 5, 2008 at 12:35pm

நன்றி சோதரா....

கவிக்கான களம் அமைத்தோம் இனி அருவிபோல் அறிவை பொழியவும் எம் "முகவன்" களம் அமைத்துள்ளார்...

http://www.facebook.com/group.php?gid=8529036383

அதில் இணைவோம், அங்கு இதுவும் இன்னும் பலவும் பேசுவோம்....

எம்மவர் எம் நிலை அறிய உம் கணை இன்று போல் என்றும் வழி வகுக்கட்டும்....

யாழவன்..

Ragawan Shan replied to Kamelrajh's poston February 7, 2008 at 12:27am

நன்றி நண்பனே. நானே இதனைப்பற்றி கூறவிருந்தேன்.
நீங்களே கூறிவிட்டீர்கள். நன்றிகள் பல.

நண்பர்களே,

நாங்கள் கவிதை தவிர்ந்த பலதரப்பட்ட விடயங்களை
இத்தளத்தின் ஊடாகப் பகிர்ந்து கொள்ளலாம்.

http://www.facebook.com/group.php?gid=8529036383

உங்கள் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.

நன்றி.


Kamelrajh Puavanakumar (Manchester) replied to Kamelrajh's poston June 18, 2009 at 8:41pm

முகவா,
கருக்களில் பிழையிருப்பின் சரி செய்தல் அவசியம். எனவே அதனடிப்படையில், பௌத்தம் பற்றி ஒரு கவி மேடையில் அலசல் நடாத்தினும். என்னதான் மேடை தவறாயிருப்பினும், அதன் நோக்கம் தவறல்ல. எனவே தயவு கூர்ந்து என் சற்று திருந்திய கருத்தை அரங்கேற்ற இடமளிப்பாய் என்ற நம்பிக்கையுடன்....
நன்றி.
யாழவன்.

என்னதான் கறுவா பயிர்செய்கைக்காய் சென்ற மக்கள் பாளி தழுவிய சிங்களத்தில் பேசினர் என அறியப்படினும், சிங்கள மொழியானது எழுத்தியலில் மாத்திரமே திராவிட முறையை பின்பற்றுகிறது என்றும் ஒலியியலில் ஆரியசேர்க்கையையே தழுவுகிறது என்றும் தெரியவருகிறது. எனவே சிங்கள பெரும்பான்மை சம்பந்தப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கு முகமாய், பின்வரும் திருந்திய பதிவை ஏற்க:

தற்போதைய மக்கள் தொகையினில் பெரும்பான்மையானோர் சிங்களவர்கள் என்பது மறுக்கமுடியாதிருப்பினும், சிங்களவர்கள் மூதாதையர்களாய் கொள்ளும் விஜயனதும் அவன் தம் 700 தோழர்களினதும் பரம்பரை மாத்திரம் அவர்களின் பெரும்பான்மைக்கு காரணமாய் இருக்க மாட்டார்கள் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடையம். மேலும், வட இந்தியாவில் இருந்து விஜயன் வந்தான் என்பதும் மறுக்கமுடியாது. ஆயினும், அவர்களின் பெரும்பான்மைக்கு காரணமாய் உள்ள மக்களில் பெரும்பான்மையோர் தென் இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்தமைக்கான சாத்தியங்கள் பல.

கி.மு.300 – 200 காலப்பகுதிகளில், சிங்களவர் (விஜயனது பரம்பரை) என இனங்காணப்படுவோர் பாளி மற்றும் சமஸ்கிரத மொழிகளின் அடியொற்றி வந்த ஒலியியலில் உருவான (முழுவளர்ச்சிகாணா) ஒரு ஒலியியலை பேசியிருந்தனர். பிற்காலத்தில் அது திராவிட எழுத்தியலை பின்பற்றிய ஒரு எழுத்துமுறையை கைக்கொண்டு வளர்ந்தது. தமிழ் சொற்கள் சிங்கள மொழியில் இருப்பினும் அது ஆரிய மொழிகளின் ஒரு பிரிவாகவே கருதப்படுகிறது. பௌத்ததின் வருகை காரணமாய், இந்துத்துவத்தினில் இருந்து பௌத்ததிற்கு தழுவிய தென்னிந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பௌத்தமொழியாய் சிங்களம் பிரதிபலிக்கப் பட்டதால் அம்மொழியையே பேசத்தொடங்கினர்.

சிங்களத்தையே தாய்மொழியாய் கொண்டதால், அவர்தம் சந்ததியும் மற்றும் விஜயன் குழாத்தின் பரம்பரையும் தம்மை சிங்களவர் என்று அடையாளப்படுத்தினர்***. இதன் மூலம் பௌத்தத்தின் ஆதிக்கத்தை அறியக்கூடியதாய் இருக்கிறதே தவிர, சிங்களவர்கள் தாம் ஆதியிலே பெரும்பான்மையர்களாய் இருந்தனர் என்பதல்ல.


இம்மக்களின் தென் பகுதிக்கான இடப்பெயர்ச்சி பற்றிய காரணங்கள் தற்போதும் கேள்விக்குறியோடே. ஒரு வாதமாய், அவர்களின் பெயர்ச்சியானது தென்னிந்திய சோழ மற்றும் பாண்டிய படையெடுப்பின் காரணமாய் இடம்பெற்றிருக்கக் கூடும் எனவும், மறு வாதமாய் வடபகுதியில் இன்னமும் சைவ தத்துவத்துடன் தமிழ் பேசிய மக்களின் ஆட்சியின் பலம் ஓங்க அவர்களின் வடகிழக்கு மற்றும் வடமேற்கு நோக்கிய பெயர்ச்சி சிங்களவரை தென்பகுதிக்கு செல்ல வைத்திருக்கலாம் எனவும் கொள்ளலாம். தீர்க்கமான பதில் இன்னமும் அறியப்படவில்லை.

*** http://www.tamilcanadian.com/page.php?cat=74&id=457

மா.குருபரன் wroteon June 19, 2009 at 4:08pm

பெளத்தம் அடிப்படையில் ஒரு மதம் அல்ல... உயிர்களை குடிக்க பாவிக்கப்படும் ஒரு வெறிக் கலாச்சாரமே.... பெளத்தம் பின பற்றப்படும் நாடுகளை அதன் கொள்கைகளை பாருங்கள். அது எப்போதுமே ஒரு வர்க்கம் அடிமைப்படுத்தப்பட உருவாக்கப்பட்ட வெறி இயக்கம். சாந்த கொள்ளைகளால் மக்களை கவர்ந்து ஆதிக்க வெறியை பரப்ப பயன்படுத்தப்படும் ஒரு தீவிரவாத நெறியே பெளத்தம். புத்தனை தவிர பெளத்தம் சாதித்தது என்ன?????? கொலைகளும் ரத்தமுமே பெளத்தத்தின் நெறியில் படிந்திருக்கிறது... அது எங்கு பின்பற்றப்படும் பெளத்தமாகினும் அது தான் உண்மை...

"மொட்டையடித்து தம்மை
வெட்டையாய் காட்ட
கட்டிக்காக்கும் பெளத்தம் - ஒரு
பெட்டைத்தீவிரவாதம்.... "

Kamelrajh Puavanakumar (Manchester) replied to your poston June 20, 2009 at 12:32am

'பௌத்தம் பற்றியது' எனும் தலைப்பில் இக்குழுதனில் ஒரு ஆய்வு சார்ந்த கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. ஆயினும், இக்களம் கவிக்கானது என்பதனால் தொடர் கருக்களை விரிவாய் ஆராய்வதில் தயக்கம். எனவே 'Tamil Diasprotic Culture - புலம்பெயர் தமிழர் பண்பாடு' எனும் குழுதனில், இக்குழுவினில் அரங்கேறிய அனைத்து கருத்துக்களையும் இணைத்திருக்கிறேன். கணைகள் தயக்கமின்றி வருமென எதிர்பார்க்கிறேன்.

தோழா, நின் கருக்களை அக்குழுவில் எதிர்பார்க்கிறேன். என் கருக்களையும் இணைக்கிறேன்.

எம் ஆய்வினால் முகவனின் கவிகாணும் எண்ணத்திற்கு இடையூறு கூடா, எனவே இம்முயற்சி.. இதனூடு, இடையூறு காணுமிடத்து என் மன்னிப்புகளை ஏற்கவும்.

நன்றி

யாழ்

'புலம்பெயர் தமிழர் பண்பாடு' குழுவின் இணைய முகவரி:
http://www.facebook.com/group.php?gid=8529036383


Kamelrajh Puavanakumar (Manchester) replied to மா.குருபரன் on June 22, 2009 at 1:30am

தோழா, எய்தவன் எங்கோ இருக்க அம்பை நோவான் ஏன்? சீனத்தை பற்றியும் குறிப்பிடுகிறாய் என நினைக்கிறேன், ஆயினும் அங்கே திபெத்தின் பௌத்தத்தை வெறுத்ததே சீனம். சீனக்கொள்கையே மதத்துக்கு எதிரானது தானே.. இதிலெங்கே பௌத்தத்தின் கொள்கை. இந்துத்துவத்தையும் இஸ்லாத்தையும் தவறாய் புரிந்து பல குழுக்கள் செய்கிற அநியாயங்களெண்ணி மதங்களை வெறுப்பதா? தவறு மார்க்கங்களில்லையே, அவை புரியாத அறிவாளிகள் எனும் அறிவிலிகளினதன்றோ? திபெத்தின் பௌத்த பீடத்தையே நாடு துரத்தி சமாதானத்தை நேசிக்கும் தலாய்லாமா இந்தியாவில் வசிக்க காரணம் யார்? பௌத்தமா இல்லை மதம்விரும்பா சீனமா?

"மொட்டையடித்து தம்மை
வெட்டையாய் காட்ட
கட்டிக்காக்கும் பெளத்தம் - ஒரு
பெட்டைத்தீவிரவாதம்.... "
உண்மை தான் இலங்கையை பொறுத்தவரை....


பட்டை நாமு(ம)ம் இட்டு
விட்டை எல்லாவற்றையும்
தொட்டு தொழுதுவிட்டு,
குட்டை தாம் ஆகி,
மட்டை மடைத்தனம் எமக்குள்ளும்...

நான் பௌத்தத்திற்காய் வக்காளத்து வாங்கவில்லை. உரிமைப்போர் சிங்கள மேலாதிக்க பௌத்தமற்ற மடையர்களுக்கெதிரானது தானே? அதிக பிரசங்கியாய் நான் இருப்பின் மன்னிப்பை வேண்டுகிறேன். இருப்பினும், அர்ச்சுணன் கண்ணிற்கு கிளிமட்டும் எப்படி தெரிந்ததோ அதுபோல் எங்கள் நோக்கு எக்காரணத்தை கொண்டும் மாறுவது கூடாது. "வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்" ஏதோ பாடலில் கேட்ட ஞாபகம்.

மா.குருபரன் wroteon June 22, 2009 at 3:02am

இல்லை நண்பா.... உங்கள் கருத்து நியாயமானது தான். சைவசமயத்தில் கடவுள் மார் அவதாரம் எடுத்து அநீதிகளை வதம் செய்துள்ளனர். அதை அவ்மக்கள் அங்கிகரிக்கிறார்கள். அதாவது அநியாயம் செய்பவன் கடவுளால் வதம் செய்யப்படுவான் இது ஏற்று கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த புத்தம் என்ன சொல்கிறது.... எதுவாகினும் உயிர்களை கொல்வது பாவமென்றல்லாவா சொல்கிறது??????????? பெளத்தத்தின் உண்மையான கொள்கையும் அதன் பீடாதிபதிகள் என்று எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படும் கண்டி மொட்டைகள் என்ன சொன்னதுகள்????????????? வன்னியில் இருப்பவர்கள் எல்லாருமே பயங்கரவாதிகள் அவர்களை கொண்றழிக்கவேண்டும் என்றல்லவா சொன்னார்கள்!!!!!!!!!!!!!! தான் என்ன சமயம் என்ன மொழி என்றே தெரியாத குழந்தைகளை கொல்ல சொல்ல இந்த பீடாதிபதிகளுக்கு எப்படி சமய ஆருடங்கள் இடம் கொடுத்தது????? ஆக வன்முறையை தூண்டும் நெறி கொண்ட சமய கொள்கை பயிற்விப்போர் கொண்ட இது எவ்வாறு ஒரு சமயமாக முடியும்???????


நாமமிட்டாலும் சரி சிலுவை கட்டினாலும் சரி கொள்கை கொலையில்லையே!!!!!!!!!!!!!! வதம் அங்கிகரிக்கப்பட்டாலும் அது பரப்படவில்லையே!!!!!!!!

என்னை பொறுத்த வரை பெளத்தம் என்பது ஒரு சமயமல்ல.... அது ஒரு தீவிரவாதம்.... பெளத்தமதத்தை பின்பற்றும் எந்த நாடெண்டாரலும் சரி அதன் கொள்கைகளும் சரி..... பெளத்தம் சாராத இனத்தை அடக்குவதற்கு வன்முறை பிழையில்லை என்பதாகவே காணப்படுகிறது.

வாசிக்க விரும்பின் இங்கே சொடுக்குக..
இலங்கையில் மனிதர்குளுடைய வருகை பற்றியும்...சிங்களம் மற்றும் பெளத்தம் பற்றியம்....மகாவம்சத்தின் உண்மை நிலை பற்றியதுமான ஓர் ஆய்வு....

0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க