Monday, September 21, 2009

செம்மணி உருவாக்கிய ஜானக பெரேரா......

4 கருத்துக்கள்
தமிழ் கண்மணிகளை
செம்மணியில் புதைத்த
சிங்களன் ஜானக பெரேரா..........

நீண்ட இரவுகளில்
கற்புகள் அழித்து
உயிர்களை தின்று
எஞ்சியதை புதைத்தான்
செம்மணியில்
ஜானக!.....

தமிழ் உறவுகளின்
கண்ணீரில்......
போதையேறி ஆடினான்
ஜானக!......

இரவுகளில்
கொலைகளையும் கொள்ளைகளையும்
செய்ததால்
தமிழினம் குருடென நினைத்தானோ
ஜானக!......

பெற்ற உயிரின் முன்னால்
பிள்ளை உயிரை
தின்றவன் பிணம்
அள்ள ஆழின்றி
அநாதையாய் கிடந்தது
காலி வீதியில்.........
அவனின்
அம்மையாரின் முன்னாலேயே
அம்மணமாய் போனான்
கண்டீரோ என்னினமே!.....

ஆவீகள் கூடி
அழித்ததோ அவனை.....

ஞாபகம் வைத்திரு சிங்களமே!.......
தமிழனின் ஆவிகளும்
குண்டு (நஞ்சு) கட்டும்....

மா.குருபரன்
oct 10 2008

4 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க