Tuesday, September 22, 2009

இன்னமும் காதல்....................

0 கருத்துக்கள்


நேற்றுகள்
நிதந்தரமாய் அழிந்தும்
இன்று ஏனடி
முகத்தை திருப்பிச் செல்கிறாய்!
உன் புன்னகையில்
விழுந்த விட்டிலோ நான்!
நான் உனக்கு
ஆயிரத்தில் ஒருவன்
அதனால்தான் நீ
அலட்சியமாய் செல்கிறாய்!
முட்களை
முறிக்க
பூக்களை பிடுங்கி விட்டதோ
காலம்!
வெளிச்சமற்ற இரவில்
தீக்குச்சியாய்
உன் நினைவுகள்!
அது போதும்
கனவிலாவது உன்னோடு வாழ!

மா.குருபரன்

0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க