Friday, September 25, 2009

பயணங்கள்..

1 கருத்துக்கள்


எப்போதும் போல

மங்கிய மாலை…

முகில்களின் குமைச்சலில்

தொங்கிக்கிடக்கிறது நிலவு….

மலை முகடுகளில்

பனியின் ஆக்கிரமிப்பு

கூடிக்கொண்டே வருகிறது…..

காற்றிற்கும் பூக்களிற்குமான

காதலின்

குளிர் நிலவு நெருக்கத்தை

அதன் தலையசைப்பு

உறுதிப்படுத்துகிறது……

இன்னமும்

இயற்கை குலையவில்லை – அதன்

இளமையும் கலையவில்லை…

மனிதம் மட்டும்

தொலைந்து போனது…

வாழ்வியல் கற்களின்

சலசலப்பும் குறைந்த பாடில்லை….

இருப்பிற்கான எல்லை

இன்னமும் தெரியவே இல்லை...

கால்கள் கடுக்க

பயணங்கள் தொடர்கிறது…….


மா.குருபரன்

25-09-09
Share on Facebook

1 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க