Tuesday, October 27, 2009

காதலிக்குப் பேனா... நண்பனுக்குக் கத்தி (படித்ததில் பிடித்தது..)

18 கருத்துக்கள்


காதலில் எக்கச்சக்க சென்டிமென்ட்ஸ் உண்டு. இதோ சில உலகக் காதல் சென்டிமென்ட்கள்...

காதலிக்கு ஊரில் உள்ளதையெல்லாம் பரிசாகக் கொடுப்பார்கள். ஆனால், பேனா மட்டும் நோ... நோ! பேனாவைப் பரிசளித்தால் காதல் பணால் ஆகிவிடுமாம். ஒருவேளை காதலி மொக்கை கவிதை எழுதுவாள் என்கிற பயமோ? காதலர்களுக்கு பேனா போல, நண்பர்களுக்குக் கத்தி. நண்பனுக்குக் கத்தியைப் பரிசாகக் கொடுத்தால், நட்பு 'சதக்' ஆகிவிடுமாம்.

கொரியாவில் ஷூ சென்டிமென்ட். ஷூவைப் பரிசாகக் கொடுத்தால் காதல் காலாவதி ஆகி விடுமாம். நைஸாகக் கழற்றிவிட நினைக்கும் காதலர்களுக்கு இதுதான் பிரிவு சிம்பல். ஒரு ஜோடி ஷூவைப் பார்சல் பண்ணிவிடுவார்கள். அப்புறம்... அழுது புலம்ப வேண்டியதுதான்!



சீனாவில் ஒரு பெண்ணை வசியம் பண்ண வேண்டுமா? ரொம்ப சிம்பிள்... உங்கள் கால் நகத்தை வெட்டித் தூளாக்கி, ஏதாவது ஒரு ஜூஸில் கலந்து அவளுக்குக் கொடுங்கள். குடித்ததும் மந்திரித்த கோழி மாதிரி அவள் உங்களையே சுற்றிச் சுற்றி வருவாளாம்!

ஸ்பெயினில் எர்மிடா டி சான் இஸிட்ரோ எனும் கோயில் இருக்கிறது. இங்கே ஒவ்வொரு வருடமும் மே 15-ம் தேதி பெண்களின் கூட்டம் கும்மிஅடிக்கும். எல்லாருடைய கையிலும் ஊசி இருக்கும். விரலில் ஊசியால் ஒரு குத்து குத்தி ரத்தம் வர வைப்பார்கள். ஒரு சொட்டு ரத்தம் கோயில் தரையில் விழுந்தால் லவ் சக்சஸ்!

கனவில் பாம்பு வந்து சுற்றிக்கொள்வதாக இளசுகள் கனவு கண்டால் லவ்வாலஜி என்று அர்த்தம். இது இங்கே இல்லை... தாய்லாந்தில். அதனால், இளம் பெண்கள் கனவில் பாம்பு வர இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்கிறார்கள். இளம் பெண்கள் சமைக்கும்போது பாட்டுப் பாடினால் பல் போன கிழட்டு மாப்பிள்ளைதான் கிடைப்பானாம். அதனால் யாரும் சாம்பிள் டேஸ்ட் பார்க்கக்கூட கிச்சனில் வாயைத் திறப்பதில்லை!

ஐஸ்லாந்தில் திருமணம் ஆகாத இளம் பெண்கள் ஓரமாக இருக்கும் மேஜையில் உட்கார மாட்டார்கள். அப்படி உட்கார்ந்தால் ஏழு வருடங்களுக்கு அவர்களுக்குத் திருமணம் நடக்காது என்பது சென்டிமென்ட்.

ஸ்பெயின், பிரேசில், கொலம்பியா போன்ற நாடுகளில் திருமண நாளன்று பெண் உடுத்தப்போகும் ஆடையை மணமகனின் கண்ணில் காட்டவே மாட்டார்கள். ஒருவேளை பார்த்துவிட்டால் திருமண வாழ்க்கை கசந்துவிடும் என்பது அவர்களின் சென்டிமென்ட்!

கொரியாவில் கல்யாணத்தின்போது பெண்கள் அதிகம் சிரிக்க மாட்டார்கள். அதிகம் சிரித்தால் பெண் குழந்தை பிறக்குமாம். உம்மென்று இருந்தால், ஆண் குழந்தை. பெண் குழந்தை தேவைப்படும் பெண்கள் கல்யாண விழாவில் மொக்கை ஜோக்குக்குக்கூட சிரித்துத் தள்ளுவார்கள்.

நைஜீரியத் தம்பதிகளிடம் ஒரு சென்டிமென்ட் உண்டு. காற்று வடக்கில் இருந்து வீசும்போது 'அது' நடந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். பெண் குழந்தை வேண்டுமா? தெற்கில் இருந்து காற்று வீசும் நேரத்துக்காகக் காத்திருக்க வேண்டியதுதான். நைஜீரியாவின் பல பகுதிகளில் இந்த சென்டிமென்ட் காற்று பலமாகவே வீசிக்கொண்டு இருக்கிறது.

'கல்யாணமே ஆக மாட்டேங்குது' என்று புலம்புகிறவரா நீங்கள்..? உங்களுக்காகவே ஸ்பெயின் சென்டிமென்ட் இருக்கிறது. கோட், சூட் போட்டு டை கட்டிக்கொள்ளுங்கள். உங்கள் உயிர் நண்பனைக் கூப்பிட்டு டையில் ஏதாவது ஒரு பகுதியைக் கட் பண்ணச் சொல்லுங்கள். சட்டுபுட்டென்று உங்களுக்கு கெட்டி மேளச்சத்தம் கேட்கும்

18 கருத்துக்கள்:

  • October 27, 2009 at 3:35 PM

    நல்ல ஐடியா சொல்லுறிங்க நீங்க இந்த விசயத்திலை மகா கெட்டிக்காரரோ?

  • October 27, 2009 at 6:11 PM

    ஹா ஹா ஹா ஹா......

    ஜயோ இது நம்ம ஜடியா இல்லிங்கோ!!!! படித்ததில பிடிச்சது..

    உங்களுக்கும் உதுல உடன்பாடு இருக்குது போல....
    வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி தியா...

  • October 28, 2009 at 8:50 AM

    ஐயய்யோ நான் பொண்டாட்டி புள்ள என்று இருக்கிறன் ஆளவிடுங்க சாமியோ


    உங்கள் கருத்துப் பகுதியில் குரியீட்டு அடையாளம் நேரத்தை தாமதப் படுத்துகிறது கவனியுங்கள்

  • October 28, 2009 at 8:50 AM

    //நைஜீரியத் தம்பதிகளிடம் ஒரு சென்டிமென்ட் உண்டு. காற்று வடக்கில் இருந்து வீசும்போது 'அது' நடந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். பெண் குழந்தை வேண்டுமா? தெற்கில் இருந்து காற்று வீசும் நேரத்துக்காகக் காத்திருக்க வேண்டியதுதான். நைஜீரியாவின் பல பகுதிகளில் இந்த சென்டிமென்ட் காற்று பலமாகவே வீசிக்கொண்டு இருக்கிறது.//

    நம்ம ஊர்ல நகரத்துல இருக்கவனுக்கு எந்த பக்கமும் இருந்து காத்து வருவதில்லை....அவன் ஃபேன்-ஐ இஷ்டப்பட்ட பக்கமா வச்சிக்கிற வேண்டியது தான்... :-)

  • October 28, 2009 at 11:12 AM

    //ஐயய்யோ நான் பொண்டாட்டி புள்ள என்று இருக்கிறன் ஆளவிடுங்க சாமியோ//
    அப்படியென்றால் மேலே சொன்ன விசயங்கள் உண்மையா பொய்யா என்று உங்களுக்கு தான் தெரியுமென்று சொல்லுங்கோ.....லொள்..ஹி ஹி ஹி

    தியா உங்களுடைய அறிவுறுத்தலுக்கு மிக்க நன்றி. இப்போது சரிப்படுத்திவிட்டேன்.
    வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி தியா..

  • October 28, 2009 at 11:16 AM

    //நம்ம ஊர்ல நகரத்துல இருக்கவனுக்கு எந்த பக்கமும் இருந்து காத்து வருவதில்லை....அவன் ஃபேன்-ஐ இஷ்டப்பட்ட பக்கமா வச்சிக்கிற வேண்டியது தான்... :-)//

    ஃபேன் போடுறதென்றால் சீலிங் ஃபேன் ஐ
    ஓவ்ப் பண்ணிடுங்கப்பா.... இல்லண்ணா எல்லாப் பக்கத்தாலையும் காத்து வந்து குழப்பிவிடும்...ஹி ஹி ஹி

    வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி ரோஸ்விக்.

  • October 28, 2009 at 12:15 PM

    அட!!!
    அட!!!
    அட!!!
    அட!!!
    அட!!!
    அட!!!
    அட!!!
    அட!!!
    அட!!!
    அட!!!
    எத்தனை விதமான நம்பிக்கைகள்...

  • October 28, 2009 at 1:21 PM

    //அட!!!
    அட!!!
    எத்தனை விதமான நம்பிக்கைகள்...// முனைவர்.இரா.குணசீலன் எதுல உங்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கு சொல்லுங்களேன் பார்ப்போம்...ஹி ஹி ஹி

    வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி நண்பரே..

  • October 28, 2009 at 2:11 PM

    வணக்கம் குருபரன்.நம்பிக்கைதான் வாழ்க்கை.சிலநேரம் நீங்கள் சொன்ன விஷயங்களை முயற்சித்தால் நடக்கலாம்.

  • October 28, 2009 at 2:13 PM

    செந்டீமெண்ட் நல்லா இருக்குதுங்கோ.....கலக்குங்க தல.......

  • October 28, 2009 at 2:23 PM

    //நம்பிக்கைதான் வாழ்க்கை.சிலநேரம் நீங்கள் சொன்ன விஷயங்களை முயற்சித்தால் நடக்கலாம்//
    நிட்சயமாக ஹேமா...

    "கல்யாணமே ஆக மாட்டேங்குது' என்று புலம்புகிறவரா நீங்கள்..? உங்களுக்காகவே ஸ்பெயின் சென்டிமென்ட் இருக்கிறது. கோட், சூட் போட்டு டை கட்டிக்கொள்ளுங்கள். உங்கள் உயிர் நண்பனைக் கூப்பிட்டு டையில் ஏதாவது ஒரு பகுதியைக் கட் பண்ணச் சொல்லுங்கள். சட்டுபுட்டென்று உங்களுக்கு கெட்டி மேளச்சத்தம் கேட்கும்"
    நான் இந்த வழியதான் ரை பண்ணி பார்ப்பம் எண்டு இருக்கிறன்.. நீங்க????

    வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி ஹேமா..

  • October 28, 2009 at 2:26 PM

    கலக்குங்க தல......

    நன்றிகள் புலிகேசி...
    நீங்களெல்லாம் கூட இருக்கும்போது பிறகேன் பயம்... :)))))))))

  • October 28, 2009 at 4:15 PM

    இப்போதுமுதல் தொடர்கிறேன்...


    காதலை ஒவ்வோர் நாட்டவரும்... என சொல்லியிருக்கும் விதம் நன்றாயிருக்கு நண்பரே...

    பிரபாகர்.

  • October 28, 2009 at 7:39 PM

    வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றிகள் பிரபாகர்...

  • October 28, 2009 at 8:18 PM

    இந்த இடுகைக்கு ஹேமாவின் பின்னூட்டத்தினை வழிமொழிகிறேன்.

    நல்ல இடுகை நண்பா...

  • October 28, 2009 at 10:31 PM

    நானும் ஆமோதிக்கிறேன் பாலாசி...
    வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி நண்பா..

  • November 1, 2009 at 4:44 PM

    இன்னும் தொடருங்கள் வாழ்த்துக்கள்..

  • November 1, 2009 at 8:48 PM

    நன்றிகள் மலிக்கா அக்கா...

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க