Thursday, October 28, 2010

இரத்தக் கறைபடிந்த கரங்கள்......

0 கருத்துக்கள்

உலகின் ஓர் மூலையில் இருளாக்கப்பட்ட கோட்டையில் இலக்கியங்கள் பொய்யாக்கப்பட்டுள்ளன. புறக்காரணிகள் கருத்தில் கொள்ளாதவிடத்து, தாக்கத்திற்குரிய காரணிகள் கருத்தில் கொள்ளாதவிடத்து, இயற்றப்படும் எந்தவொரு சமன்பாடும் சமன் என்ற எடுகோளுடன் ஒரு உயிரின படுகொலை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
காந்தியம் என்ற பாலிய மாறிலியால் மனித படுகொலை சமன் செய்யப்பட்டுள்ளது. நிறுவப்பட்டுப்போன ஒரு படுகொலை சமன்பாட்டினால் ஆள்கூறு அச்சுக்கள் மாறி எங்கோ ஒரு இடத்தில் குற்றப்பட்டுள்ள இந்த புள்ளி வேண்டுவதென்னன்றால்.....

புறக்காரணிகள் மாறவேண்டும்... சமன்பாடு மாற்றப்பட காரணமான காந்திய மாறிலியை புறக்காரணிகளின் மாற்றத்தால் நீக்க வேண்டும். புறக்காரணிகளின் தாக்கமில்லாததால் சமன்பாட்டின் சமச்சீரை குலைத்து மாறிலி மாயையால் சமன் செய்யப்பட்ட மனிதபடுகொலை சமன்பாட்டை இனியாவது புறக்காரணிகள் சரிசெய்ய வேண்டும்.



* * * * * * *


பிரந்திய வல்லாதிக்க வலைக்குள் பாலியல் கறைபடிந்த காந்திய கோட்டைக்குள் மனித விழுமியங்கள் தொலைந்து கொண்டிருப்பதை எங்கே முறையிடுவது?????


காந்தியமே!!!!!!!


அண்டம் தெரியாதஅலிக் கூட்டத்திற்கு
ஆள் கொடுத்து
மாந்தர் கூட்டத்தை
மாளச்செய்ததாய்
பெருமைப்படுகிறாயே -உன்
தேசத்தின் தலைவர்கள் என்ன
விபச்சார விடுதியிலா பிறந்தார்கள்!!!!!!!

* * * * * *

எவனோ நிலாவில்
கொடி குத்த - நீ
நிலா போவதுபற்றி யோசித்தாய்
நானோ
என் வீட்டு குடிசையில்
என் குழந்தைக்கு
நிலாச்சோறு ஊட்ட நினைக்கிறேன்...
இதில் என்ன தவறிருக்க முடியும்!!!!!!!





பிச்சைகாரர்களின் எச்சிலிலும்
விபச்சாரிகளின் உறையிலும்
மேடாய் கிடக்கும் காந்தியமே - உன்
அசிங்கத்தை
அள்ளி எடுத்துப் பார்
நீ கொன்று போட்ட
மனிதங்களின் எச்சங்கள்
அங்கே கிடக்கும்....
விஞ்ஞானம் உண்மையென்றால்
இதுவரை வாசிக்கப்பட்ட
இலக்கியங்கள் உண்மையென்றால்
சுயசரிதைகளும்
வரலாறுகளும் உண்மையென்றால்....
ஜனநாயகம் என்ற
மனிதவியலில்
நரபலி எடுத்துக் கொண்டிருக்கும்
இந்தியம் பொய்யாக்கப்பட வேண்டும்...


கஞ்சிக்கழுதபடி கனவுகளை தொலைத்து வீதிகளில் மாண்டுபோன எம் குழந்தைகளின் கதறல்களின் படி..... நஞ்சு வீசி நர பலி எடுக்கப்பட்ட, பிஞ்சுகளை சுமந்து கெஞ்சிக் கெஞ்சி வீ்ழ்ந்து போன எம் தாய்மார்களின் கதறல்களின் படி....மாண்டு போன மறவர்களின் தியாக கனவுகளின் படி... முடமாயும் பிணமாயும் வீசப்பட்டுப்போன ஜந்தறிவு ஜீவன்களின் ஏக்கங்களின் படி...... சமூகவியலின் மனிதவியல் விலங்கியல் பற்றிய சூழல் சமச்சீர் தன்மை ஏற்றுக்கொள்ளப்படுமிடத்து காந்திய போதையில் மறைந்து கிடக்கும் சோனியாயிசம் இல்லாது செய்யப்பட வேண்டும்.


அதாவது கிளைகளை வெட்டிப் பலனில்லை என்கிறேன். மாமிசம் தின்னும் மரத்தின் வேரை பிடுங்க வேண்டும்.


* * * * * * * * * * * * * * * * * * * * ** * * * *

காந்தியமே!!!!
நாம் எரிந்து போன
சாம்பலின் படிமங்கள்
உங்களின் கரைகளில் தான்
கிடக்கிறது..-எமை
கொன்று போட்ட கழுகுகள்
உங்களிடம் தான் இருக்கிறது...
எங்கள் ரத்தத்தையும்
சொத்துகளையும்
தின்று போட்ட
உங்கள் கழுகிற்கு - இனி
உங்கள் தீனி தேவையில்லை...
தேவையானால்
உங்களை தின்னவும் - அது
கற்றுக்கொண்டு விட்டது....
அதனால் தான் சொல்கிறேன்
எங்களின் ரத்தம்அதன்
அலகில் காயுமுன்
கழுகை
கூண்டுக்குள் ஏற்றுங்கள்.....

உங்கள் காந்திய மதில்களில் தெரியும் இந்த கழுகின் எச்சம், உங்கள் வீட்டுக்குள்ளும் இருக்கும் செய்தி நாளை ஊருக்கு தெரிந்துவிடும்... அதனால் தான் சொல்கிறேன் உங்கள் வீடு இப்போது இருக்கும் அழுக்குகளோடு அழகாகவாயினும் இருக்க வேண்டுமானால் கழுகை கூண்டுக்குள் ஏற்றி, உங்கள் கரங்களில் படிந்து கிடக்கும் எங்களின் சாம்பலை சாந்தியடைய செய்யுங்கள்.
இதை இன்றே செய்ய ஆரம்பியுங்கள்.... சூழல் மாற்றம் புறக்காரணிகளின் தாக்கத்தை கட்டாயம் அதிகரிக்கவே செய்யப்போகிறது. அதனால் தான் மரணவெளியிலும் உங்களுக்கு மனிதாபிமான சந்தர்ப்பம் கொடுக்கப்படுகிறது.......


* * * * * * * * * * *
இங்கே நிகழப்போகும் சமூகவியல் மற்றும் சூழலியல் படிம சமன்பாட்டை ஏற்றுக்கொள்ள வேமாற்றங்களால் பொய் மாறிலிகள் அகற்றப்பட புறக்காரணிகளின் தாக்கம் பற்றிய விஞ்ஞானம் எமது சுயநிர்ணய உரிமைண்டும்.. ஏற்றுக் கொள்ளும்.




மா.குருபரன்

04-05-2010


0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க