Friday, August 19, 2011

ஒருதலைக் காதல்...

0 கருத்துக்கள்

மெளனத்தின் இடைவெளியில்
மொழியை பிரசவிக்க தவிக்கிறது
காதல்..

எதிரும் புதிருமாய்
சந்தித்த பின்னும்,
நீண்டு கிடக்கும் மெளன வெளி...

பேசக்கிடைத்த போதும்
வரண்டு கிடக்கும் மொழி,
விடைபெற்று போனதும்
இரவுகளில் வலிக்கும்....

ராப்பொழுதுகளில் ஊார்ந்துவரும்
சோக சங்கீதத்தில்
வலி
சோகமாய் கரையும்....

போதை ஏறிய நாளொன்றின்
நிலாக்காயும் நேரம்,
காதல் கனவுகள்
ஓவியம் வரைந்து கொண்டிருக்கும்....
அங்கும்
அவள் வருவாள் போவாள்
ஒரு கணப்பாழுதில்
காதல் பேசப்படிருக்கும்...

தூங்காமல்
தூர்ந்து கிடக்கும்
இரவுவொன்னறில்,
அவள் பற்றி
மனசு பேசிக் கொண்டிருந்திருக்கும்...

மனம்
மென்மையை ரசிச்திருக்கும்...
குளிர்ச்சியை அணைத்தபடி
குடையற்ற நாளொன்றின்
மழைப் பொழுதுகளில்
நனைய பிடித்திருக்கும்....

அவள் வந்துவிடப்போகும்
அந்த நிமிடங்களில்
மனசு படபடத்திருக்கும்....

மெளனங்களின் இடைவெளியில்
காதலின் மொழி
பேசப்படாமல்
துடித்திருக்கும்...

மா.குருபரன்
19-05-2011


குறிப்பு: ஓருதலைக் காதலில் சிக்கி தவித்தவர்கள்... இதை அனுபவத்திருப்பின் சொல்லிவிட்டுப் போங்கள்.




0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க