Sunday, September 25, 2011

பிரிவும் காத்திருப்பும்..

3 கருத்துக்கள்


கொண்டல் மர நிழல்
தீனி பொறுக்கிவிட்டு
ஏதேதோ பேசிக்கொண்டிருக்கின்றன
குருவிகள்..
மெளனம் கலைந்துவிட்ட பின்னும்
மீண்டும் மெளனம்..
குருவிகளுக்குள் இத்தனை காதலா!!
சின்ன சின்ன சீண்டலும்
இடையிடையே முத்தமுமாய்
எப்படியெல்லாம் காதல் செய்கிறது
குருவிகள்!!!

சிறகினால் சீண்டுவதுவும்
உச்சி முகர்ந்து
முத்தம் கொடுப்பதுமாய்
எத்தனை மணிநேரம்
கொண்டாடுகின்றன..
பிரிவும் காத்திருப்பும்
இத்தனை ப்ரியத்தை தூண்டுமா!!

அந்த ஒற்றைக் குருவி
அதன் காதலுக்காய்
பல மணிநேரம் காத்திருந்திருக்கும்,
மற்றயதும் பல மணி நேரம் தேடியிருக்கும்..
காத்திருப்புக் காதலின் வலியை
எப்படியெல்லாம் கொண்டாடுகிறது
குருவிகள்..!!

பூமியில் முகம் புதைத்து
சிறகு பரப்பி தூங்குகிறது
ஒரு குருவி...
நிட்சயமாக அது
பெண்குருவியாய் தான்
இருக்க வேண்டும்..
மற்றயது ஓடிவந்து
அதன் சிறகோடு ஒட்டியபடி
தூங்குகிறது..
இடையிடையே சிறகுதட்டி
அதை சீண்டுகிறது...

அந்த மரக்கிழையிலேயே
சின்ன கூடு கட்டுகின்றன..
அதன் முற்றத்தில்
காதல் செய்கின்றன..

பிரிவும் காத்திருப்பும்
இத்தனை ப்ரியத்தை தூண்டுமா!!


மா.குருபரன்
25-09-2011





3 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க