Saturday, May 31, 2014

கிறுக்கப்படாத கோடுகள்

0 கருத்துக்கள்


   வாசிக்கப்படாத பக்கங்களாலும்
   கோர்க்கப்படாத வார்த்தைகளாலும்
   உலர்ந்து உதிர்ந்து போன
   நினைவுகள்...

   மௌனமாய் விரிந்துகிடக்கிறது - என்
   நாட்குறிப்பேடு..

  ஒவ்வொருநாளும்
   வெற்றுத்தாள்களை புரட்டி
   பேனாவை சொருகி வைப்பதோடு
  முடிந்துவிடுகிறது எழுத்து...

  நாட்குறிப்பேட்டின் பக்கங்களை
  வெற்றுத்தாளாய்,
  வெறுமையாய் கடந்து போவது
  அத்தனை சுலபமல்ல..

மா.குருபரன்
31-05-2014


0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க