Wednesday, May 27, 2015

கா அய் க்கு ( ஜந்துவரிக் கவிதைகள் - கவிதை என்றும் சொல்லலாம் ;) )

0 கருத்துக்கள்
நன்றி: கூகிள் ஆண்டவர்


ஒருதலைக் காதல்
சொல்லப்படாத ஏதோவொரு இடைவெளியில்
கசிந்து வழியும் காதலை

அள்ளிப் பருகியபடி 

இரவுகளைத் தொலைத்துவிடும் 
அன்பு!


ஏக்கம்
கனவுகளை 
மொழிபெயர்க்கத் தெரியாத
குழந்தையாய்
என்னென்னமோ உளறிக் கொண்டிருக்கிறது
உன் பற்றிய காதல்

27-05-2015


மழை‬ ஓய்ந்த மாலைப் பொழுது
மழையின் முத்தத்தால்
வெட்கிக் குனிந்து நிற்கும் மொட்டுகளில் 
எஞ்சிக் கிடக்கிறது காதலின் துளி

04-08-2015

மா.குருபரன்


0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க