Saturday, November 21, 2015

சீனாவை போருக்கு இழுப்பது ஐ.எஸ்.ஐ.எஸ் ஆ இல்லை அமெரிக்காவா!!!

1 கருத்துக்கள்


சர்வதேச வல்லரசாக வேகமாக வளர்ந்துவரும் சீனா பிற நாடுகள் மீது நேரடியான ராணுவச் செல்வாக்கைச் செத்தாமல், தேவையான நாடுகள் மீது பொருளாதார ரீதியாக ஊடுருவி அந்தந்த நாடுகளின் அரசியல் மீது செல்வாக்குச் செலுத்தும் இராஜதந்திரப் பாணியை முன்னெடுத்துவருகிறது.


தென்கிழக்காசியா, மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் சீனாவின் சந்தை மிகப் பலமாக மாற்றமடைந்து வருகிறது. இந்த பொருளாதார போரானது நீண்டகாலத்தில் மேற்குலகின் சந்தை வலுவையும் வல்லரசுப் போக்கையும் நிட்சமாக ஆட்டம் காணச் செய்யும்.

இந்த நிலையில் போர்குறித்து நழுவல் போக்கை கடைப்பிடித்துவரும் சீனாவை போருக்கு இழுத்து வந்து அவர்களின் போர்த்திறன் பற்றிய அளவீட்டை செய்ய வேண்டிய தேவை மேற்குலக நாடுகளுக்கு இருக்கிறது.

சீனாவை மேற்குலகு இழுக்கும் போரானது வித்தியாசமானது. இந்த களம் இஸ்லாமிய ஜிஹாதிகளுக்கு எதிரானது. இங்கு இரண்டு நாடுகள் மோதப் போவது கிடையாது. ஆனால் மேற்குலகின் ஆயுதங்களும் சீனாவின் ஆயுதங்களும் மோதப் போகின்றன. அதற்கு முதல் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான போரில் சீனா என்னமாதிரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதே இப்போதுள்ள கேள்ளவி.

சீனாவும் இஸ்லாமும்

சீனாவில் அதிகளவில் பின்பற்றப்படும் மதம் என அறியப்பட்டிருந்தாலும் பள்ளிவாசல்களினூடாக இஸ்லாமிய கற்கை நெறிகள் தடை செய்யபடப்டிருந்தன. கம்யூனிச கல்வியும் கொள்கைகளும் கற்பிக்கபட்டு வந்தமையினால் இஸ்லாமிய மதம் சார்ந்த சமூக கல்வி நெறிகள் தடை செய்யபட்டிருந்தன என்று சொல்லலாம்.

மத உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டிருந்தாலும் சீனாவில் இஸ்லாமிய கொள்கைவாதம் தலைதூக்கமால் இருக்க வேண்டும் என்பதில் கம்யூனிச ஆட்சியாளர்கள் எப்போதும் அவதானமாக இருக்கிறார்கள்.

சீன கம்யூனிஸ ஆட்சியாளர்கள் நினைத்தது போலவே இஸ்லாமிய கொள்கைவாதம் படிப்படியாக சீனாவில் தலைதூக்க ஆரம்பித்தது.

ஷிஞ்ஜியாங் எனப்படும் சீனாவின் தன்னாட்சி மாநிலத்தின் எல்லை நாடானா மொங்கோலியா ஊடாக இஸ்லாமிய கொள்கைவாதம் சீனாவிற்குள் ஊடுருவ முயற்சிகள் செய்யப்பட்டமை சீனாவின் இராணுவத்தால் முடியடிக்கபட்டிருக்கின்றன.

இப்படி நாளுக்கு நாள் இஸ்லாமிய ஜிஹாதிகள் சீனாவிற்குள் செல்வாக்கை அதிகரிக்க முயற்சிக்கும் வேளையில்தான் சீன அரசு இஸ்லாமியர்களின் நோன்பை தடை செய்திருக்கிறது.

தவிர இஸ்லாமிய ஜிஹாதிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் பல இஸ்லாமியர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது.


அதாவது கம்யூனிச கொள்கையை கற்பித்து அதனூடாக அரசை தக்க வைத்திருக்கும் சீன அரசிற்கு இஸ்லாமிய கொள்கைவாதமானது முரணானது. ஷரியா சட்டம் உள்ளிட்ட பல இஸ்லாமிய கொள்கைவாதமானது சீன கம்யூனிசிய சட்டத்திற்கு முரணானது. அதனால் சீனாவில் இஸ்லாத்தை எப்போதும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்பது அந்த நாட்டின் எழுதப்படாத சட்டம்

(ஜப்பானிலும் இஸ்லாம் தடை அல்லது அதற்கு சமனான சட்டம்).


சீனாவின் நழுவல் போக்கு

சீனாவிற்குள் ஊடுருவ எத்தனிக்கும் இஸ்லாமிய ஜிஹாதிகள் பற்றி சீனா அறிந்து வைத்திருந்தாலும் அவர்கள் மீது நேரடி இராணுவ தாக்குதல்களை செய்ததற்கான எந்த ஆதாரங்களும் இன்றுவவரை இல்லை.

இஸ்லாமிய ஜிஹாதிகளுக்கு உதவ நினைக்கும் தனது நாட்டு பிரஜைகளுக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்கி இஸ்லாமிய தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது சீனா.


----------------------------------------------------------------------------------------

சீனாவின் வெளிநாட்டு பொருளாதார இலக்குகள் மீது, ராஜதந்திரிகள் மீது, சீன பிரஜைகள் மீது இலக்கு வைப்பதன் மூலம் இஸ்லாமிய ஜிஹாதிகளுக்கு எதிராக சீனாவும் நேரடியாக களத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிக் கொண்டுவருகிறது.

இந்த திட்டமிட்ட செயலானது மேற்குலகின் நிகழ்ச்சி நிரலா அல்லது இஸ்லாமிய ஜிஹாதிகளின் நிகழ்ச்சி நிரலா என்பது சீனாவின் அடுத்தகட்ட நகர்வுகளின் இருந்து அறிந்து கொள்ள முடியும்.



 ======================================================
இஸ்லாமிய தேசத்தில் யேசுவைத் தொழுதவன் கதி

இஸ்லாமிய கொள்கை வாதத்தில் எதிர்காலத்தில் நாடுகள் மாற்றங்களை கொண்டுவரக் கூடிய சூழல் உருவாக வாய்ப்பிருக்கிறது. அதாவது இஸ்லாமை ஒரு மார்க்கமாக மாத்திரமே (பெளத்தம் போல) அணுக கூடிய சட்டங்கள் இயற்றப்பட வாய்ப்பிருக்கிறது.

உதாரணத்திற்கு சிங்கள இனத்தவர் ஒருவருக்கு இஸ்லாம் மார்க்கத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவர் அதை பின்பற்ற தொடங்கினால் அவர் மதமாற்றம் மட்டுமல்ல இனமாற்றமும் செய்யப்படுகிறார். சிங்களவர் என இருந்த அவரின் இன அடையாளம் முஸ்லீம் என மாற்றப்படுகிறது.

அதாவது இஸ்லாமிய மதம் என்பது இன அழிப்பின் ஆரம்பக்கூறை தொடங்கி வைக்கிறது என்ற சிந்தனை இப்போது உலகளவில் வலுப்பெற்று வருகிறது.

முஸ்லீம் என்பது மற்றைய இனங்களை அழித்து இஸ்லாமியத்தால் கட்டப்படும் செயற்கையான இனம் என்பதால் அற்குள் மனிதம் இல்லாமல் செய்யப்படுகிறது என்ற கருத்தியலும் உலகளவில் வலுப்பெற்று வருகிறது.

இஸ்லாம் அன்பையும், ஒழுக்கத்தையும் போதித்தாலும் அதற்குள் புதைந்திருக்கும் இன அழிப்புக் கூறுகள் மீது சந்தேகம் எழுந்திருப்பதாக பலர் கருத்து வெளியிடுகிறார்கள்.


இஸ்லாமிய ஜிஹாதிகள்


===========================================================

எல்லா அரசுகளும் தமக்கானதை மட்டுமே செய்திகள் ஆக்குவர். ஆனால் ஆயுதங்களால் அழியப்போவது அல்லாவோ, புத்தரோ, யேசுவோ, சிவனோ கிடையாது. அப்பாவிகளும் குழந்தைகளுமே இந்த யுத்தத்தில் மாளப்போகின்றனர்.

புகைப்படக் கருவியை துப்பாக்கி என நினைத்து சரணடையும் சிரியக் குழந்தை

+ கருத்துப் பிழைகள் இருப்பின் கீழுள்ள கருத்திடும் பகுதியிலோ அல்லது webkuru@gmail என்ற மின்னஞ்சல் முகவரிலோ தெரியப்படுத்துங்கள்.

மா.குருபரன்
21-11-2015


1 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க